Header Ads

உன்னை தொலைச்சுப்புடுவேன் : நயன்தாராவுக்கு செம டோஸ் விட்ட ஆர்யாவின் அம்மா

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆரம்பித்த ஆர்யா - நயன்தாரா கெமிஸ்ட்ரி ராஜாராணி வரைக்கும் பிக்கப் ஆகி வருகிறது.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாரா ஆர்யாவுடன் நெருக்கம் காட்டுகிறார். இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார்கள் என்றெல்லாம் மீடியாக்கள் அடுத்தடுத்து செய்திகளை கொளுத்திப் போட்டன.

இதற்கெல்லாம் முதலில் அசராத ஆர்யா அப்புறம் நிலைமை தீவிரமாகிப் போவதை உணர்ந்து எங்களுக்குள் காதல் இல்லை. மற்ற நடிகைகளுடன் பழகுவதைப் போலத்தான் நான் நயன்தாராவுடன் பழகுகிறேன் என்று தன் தரப்பில் ஸ்டேட்மெண்ட் விட்டார்.

இதற்கிடையே ஆர்யாவுக்கு வயதாகிக் கொண்டே போவதால் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார் அவருடைய அம்மா.

ஆனால் போகிற இடத்திலெல்லாம் பெண் வீட்டார்கள் ஆர்யாவின் காதலை லீலைகளைப் பற்றி கிடுக்குப்புடி கேள்விகளை அடுத்தடுத்து அடுக்க, ஆர்யாவுக்கு பொண்ணு தேடுவதே அவருடைய அம்மாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

உடனே அப்செட்டான அவர் நயன்தாராவை வீட்டுக்கு கூட்டிவருமாறு ஆர்யாவிடம் சொல்ல, அவரும் சந்தோஷமாக நயன்தாராவை கூட்டிப் போயிருக்கிறார்.

வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு அவரை தனியே அழைத்து சென்ற ஆர்யாவின் அம்மா "இனிமே என் மகனோட உன்னை எந்த ஒரு பப்ளிக் பங்ஷன்லேயும் பார்க்கக் கூடாது. உன்னால அவனுக்கு பொண்ணு கெடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால இனிமே உன்னை எங்காவது என் மகனோட சேர்த்து வெச்சு பார்த்தா தொலைச்சுப்புடுவேன்" என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம்.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல சமீபத்தில் நடந்த ராஜாராணி படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் ஆர்யாவுடன் நெருக்கமாக இருந்ததோடு மட்டுமில்லாமல், மீடியாக்களுக்கும் அவருடன் சேர்ந்து நின்று போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

No comments:

Powered by Blogger.