Header Ads

5 சிறுமிகளை கற்பழித்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தின் ரன்ஷேத் படா பகுதியில் வசித்தவன், ரமேஷ்(45). வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுமிகளை ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தனது வீட்டுக்கு அழைத்து சென்ற இந்த காமக்கொடூரன், அவர்களை கற்பழித்து விடுவது வழக்கம்.

நடந்த விஷயத்தை வெளியே சொன்னால், உன்னையும் உன் அப்பா- அம்மாவையும் கொன்று விடுவேன் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை இவன் மிரட்டி அனுப்புவதுண்டு. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி, தனது பண்ணை வீட்டில் ஒரு சிறுமியிடம் இவன் தகாத முறையில் நடந்து கொண்டபோது, அதை நேரில் பார்த்த ஒருவர் ஊர் மக்களிடம் தெரிவித்ததையடுத்து, அந்தரங்கமாக அரங்கேறி வந்த இவனது காம சேட்டைகள் அம்பலத்துக்கு வந்தது.

ஊர் மக்கள் அளித்த புகாரையடுத்து அவனை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில் 12-லிருந்து 15 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை அவன் சின்னாபின்னப்படுத்தி, சீரழித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, தானே மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.