Header Ads

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கழுத்தை அறுத்து கொலை

மும்பை காட்கோபர் பந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் நீத்தேஷ் ரானே(வயது35). கட்டண கழிப்பிடம் நடத்தி வந்தார். கடந்த 27–ந்தேதி கழிப்பிட மேல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் நீத்தேஷ் ரானே பிணமாக கிடந்தார்.

இதையடுத்து பந்த் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் நீத்தேஷ் ரானே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கள்ளகாதலனுடன் மனைவி

இதையடுத்து போலீசார் நீத்தேஷ் ரானேவின் மனைவி ரூபினாதேவி(31)யிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் உடலை வீசியதாக மனைவி ரூபினா தேவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

நீத்தேஷ் ரானேவின் மனைவி ரூபினா தேவிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் சவுத்ரி(18) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்தநிலையில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சமீபத்தில் நீத்தேஷ் ரானேவிற்கு தெரியவந்தது. இதையடுத்து நீத்தேஷ் ரானே மனைவியை கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரூபினாதேவி, அவரது கள்ளக்காதலன் பிரசாந்த் சவுத்ரியுடன் சேர்ந்து சம்பவத்தன்று கணவர் நீத்தேஷ்ரானேவை கழுத்தை அறுத்து கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் உடலை வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரூபினா தேவி அவரது கள்ளக்காதலன் பிரசாந்த் சவுத்ரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.