Header Ads

இனம் பட விமர்சனம்..video

பொதுவாக ஒரு சில படைப்பாளிகள் உண்மை சம்பவங்களை படம் எடுக்கும்போது நிஜமான உண்மையை நிழல் போல் எடுத்து விட்டு, நிழல் போல் பொய்யை உண்மை போல் சித்தரிக்க பார்க்கிறார்கள்.
அந்த வகையில் நிஜமான சம்பவத்தை பொய்யான வடிவில் செதுக்கியுள்ள படமே இனம்.

இந்த மாதிரியான உண்மை சம்பவத்தை படம் எடுக்கவோ, எண்ணவோ இங்கு யாருக்காவது துணிவு இருக்கா என்று கேட்பதை விட அறிவு இருக்கா என்ற கேட்டால் நல்லது என நினைக்கத் தோன்றுகிறது.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இனப் படுகொலை கதையை இனக்கலவரம் என்ற பெயரில் எடுத்து இருக்கும் படம் தான் இனம்.

இந்த படத்தை இயக்கியிருப்பவர் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இனம் ரிலீசிக்கு பல மாதங்கள் காத்து இருக்க ,கரம் போல் கை நீட்டினார் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு ரிலீஸ் ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க இன்று உலக அளவில் வெளியாக உள்ளது.

இனம் என்ன சொல்ல வருகிறது?

“அதாம் பா நானும் இம்மா தடவை யோசிக்கிறேன் என்று நினைக்க வைக்குது”. பொதுவாகவே கற்பனை கதையை காட்டினாலே குறை சொல்லும் இந்த உலகில் ஒரு இனம் சார்ந்த மக்களின் துயரங்களை காட்டும் போது எவ்வாறு உண்மை அங்கு பிரதிபலிக்க வேண்டும், அதுவும் இங்கு இல்லை.

சரி என்ன தான் கதை

உலகம் அறிந்த உண்மை கதை தான் என்றாலும் ஒரு பெண்ணின் பாதையில் இருந்து தான் கதை நகர்கிறது, ஈழத்திலிருந்து தப்பி தமிழகத்துக்கு வரும் ஒரு சிறுமியை தமிழக அதிகாரி ஒருவர் விசாரிக்கிறார். அந்த பெண் ஈழத்தில் என்ன நடந்துது, நாங்கள் இங்கே எப்படி வந்தோம், என்பதை அந்த அதிகாரியிடம் விவரிக்கிறார்.

அவள் கதையை கேட்டு மனம் உடைந்த அந்த அதிகாரி அவளை விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

கண்டிப்பாக இனம் மக்களின் உண்மையான ரண வலியை காட்டிய சந்தோஷ் சிவனுக்கு பாராட்டுக்கள், ஆனால் ஏன் எண்டு கார்டில் போரில் இறந்தவர்கள் 40 ஆயிரம் பேர்தான் என்று தவறாக செய்தி சொல்லி இருக்கிறார், உண்மையில் ஆயிரக்கணக்கில் தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்தவையா?

இனப் படுகொலையை, இனம் கலவரம் என்ற வசனமாக மாற்றி ஆங்காங்கே படத்தில் கேட்கவைப்பதற்கான நோக்கமென்ன?

ஏன் போராளியாக சித்தரிக்கப்பட்ட நபர்கள், பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவர், சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

அதிலும் படத்தில் ஒரு காட்சியில் சரியாக சாப்பிட்டு ரொம்ப நாளானது என்று ஒரு போராளி சொல்வது போல காட்சி அமைத்து, தங்களது இனத்திற்காக போராடும் போராளிகளை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டது இப்படம்.

சிங்கள இராணுவத்தால் தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது என்பது நாடறிந்த உண்மை, அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் இங்கோ ஒரு காட்சியில் தமிழ் பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார். (மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்).

அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள்.

அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புறபடுத்துகிறான்.

போராளி துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது. (அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்) (சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்) ஆக போராளிகளை குற்றவாளிகள் போல் சித்தரிக்கிறார் சந்தோஷ் சிவன்.

நாடு அறிந்த உண்மை சம்பவத்தை ஒரு கலையாக பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் இயக்குனர் சந்தோஷன் சிவன்.

இருந்தாலும் படமாக பார்த்தால், ஒளிப்பதிவும், வசனங்களும் நச், மென்மையான இசை கொடுத்த விஷால் சந்திரசேகர் ஒரு படி முன்னேறுகிறார்.

படத்தில் நடித்து இருக்கும் ரஜினி மற்றும் நந்தன் ஆகிய இரு கதாபாத்திரங்கள் நெஞ்சில் நிற்கிறார்கள், குறிப்பாக நந்தன் தன் இயல்பான நடிப்பாலும் நம்மை கவருகிறார்.

மொத்தத்தில் இனம் நிஜம் இல்லை!

No comments:

Powered by Blogger.