Header Ads

பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து 5 வருடமாக மருமகளை கற்பழித்த மாமனார் கைது

மருமகள் மீது மோகம்

தானே மாவட்டம் பிவண்டி பிரம்மஹாலி பகுதியை சேர்ந்தவர் பபன்கேசவ்(வயது50). இவரது மகன் சங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கருக்கு கடந்த 6 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. சங்கர் இரவு நேர பணிக்கு செல்வது வழக்கம். இதனால் இரவில் தனியாக இருந்த சங்கரின் மனைவி மீது மாமனார் பபன்கேசவுக்கு மோகம் உண்டானது. மருமகளை கற்பழிக்க திட்டமிட்டார்.சங்கர் இரவு பணிக்கு செல்லும் நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பபன்கேசவ், மருமகளுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுப்பதும், அதை குடித்த பின் அயர்ந்து தூங்கும் மருமகளை கற்பழிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

மாமனார் கைது

இந்தநிலையில், சமீபத்தில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த சங்கரின் மனைவிக்கு பபன்கேசவ் மீது சந்தேகம் உண்டானது. இதுபற்றி மருமகள் கேட்டபோது, கடந்த 5 வருடங்களாக தூக்க நிலையில் கற்பழித்து வந்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தை சங்கரிடம் கூறினால் ஏதாவது கூறி கணவன், மனைவி 2 பேரையும் பிரித்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரின் மனைவி நிஜாம்பூர் போலீஸ் நிலையத்தில் மாமனார் பபன்கேசவ் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பபன்கேசவை கைது செய்தனர்.

No comments:

Powered by Blogger.