மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியின் சிகனல் சீன கப்பலுக்கு கிடைத்து உள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி இன்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடு கின்றன,
விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி நேற்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடு கின்றன.
இந்த நிலையில்; இன்று சனிக்கிழமை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் சீனாவின் ஹைசூன் 01 கப்பல் காணாமல் போன மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியின் சிக்னலை கண்டறிந்து உள்ளது..வினாடிக்கு 37.5 கிலோகெட்ஸ் அதிர்வெண் கருப்பு பெட்டியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த் சிக்னல் கடலின் 19 ஆயிரம் அடியில் இருந்து வருவதாக கணக்கிட்டு உள்ளனர்.

No comments: