Header Ads

சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் கத்தி!

அது என்னவோ தெரியவில்லை விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் கூட்டணி அமைத்தாலே அந்த படத்துக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் வருவது வாடிக்கையாகி விட்டது. துப்பாக்கி படம் திரைக்கு வந்தபோது டைட்டில் பிரச்னை மட்டுமின்றி, முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

அதேபோல், இப்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் கத்தி படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, இந்த படத்தை தயாரித்துவரும் ஐங்கரன் மூவீஸ், தயாரிப்பு செலவு அதிகரித்து வருவதால், பார்ட்னராக லைகா மொபைல்ஸ் என்ற நிறுவனத்தையும் தங்களுடன் இணைத்துள்ளது.

ஆனால் இந்த நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானதாம். அதோடு, ராஜபக்சேவுடன் இவர்களுக்கு தொழில்முறை ஒப்பந்தங்கள் உள்ளதாம். அதனால் இந்த கத்தி படத்தில் ராஜபக்சேவும் மறைமுகமாக ஒரு தயாரிப்பளராக இருப்பதாக சில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டி வருவதோடு, இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கொடி பிடித்துள்ளன. இதனால் கத்தி பட வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.

No comments:

Powered by Blogger.