Header Ads

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி நடிக்கும் 'பூஜை' படத்தின் கதை!

விஷால் - ஸ்ருதிஹாசன் புதுக் கூட்டணியில் “பூஜை” படத்துக்குப் பூஜை போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி. பூஜை படம் குறித்தும், கதை குறித்தும்  ஹரி சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 

“நாட்ல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சனையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்பp பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்கிறோம். சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்துர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய் முடியும்.




என் படத்துல எல்லாமே கலந்து தானே இருக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட “தாமிரபரணி” பண்ணேன். அது முழு நீள ஆக்ஷன் படம் கிடையாது. “விட்டுக் கொடுத்தா வாழ்க்கையில பிரச்சனை இல்லைன்னு குடும்ப சென்டிமென்ட்தான் மெசேஜ். இந்த ஏழு வருஷத்தில் ஆக்ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபார்மராகவும் விஷால் வளர்ந்திருக்கார். அதேமாதிரி “பூஜையும்” நான் ஏற்கனவே பண்ண படங்களின் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இருக்கும் இந்த படம்.

“கதை நடக்கிறது கோயம்புத்தூர்ல. அங்கே இதைவிடப் பிரமாதமான காஸ்ட்யூம்ஸ் கிடைக்குமே. படத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைபட்டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்கு படத்துல நிறைய வேலை இருக்கும்.'' என்கிறார் ஹரி.

No comments:

Powered by Blogger.