Header Ads

பவன்கல்யாண் 3–வது திருமணம்: ரசிகர்கள் எதிர்ப்பு

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30–ந்தேதியே இவர்கள் ஐதராபாத் எர்ரட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இப்போதுதான் அது வெளியாகி இருக்கிறது. 

1997–ல் விசாகபட்டினத்தை சேர்ந்த நந்தினியை பவன்கல்யாண் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு இரண்டு வீட்டிலுமே எதிர்ப்பு இருந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விவாரத்தும் செய்து கொண்டார்கள். 

அதன்பிறகு 2009–ல் நடிகை ரேணு தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் பவன்கல்யாணுடன் இணைந்து பத்ரி, ஜானி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு அகிராநந்தன் என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். 

பிறகு ரேணுதேசாவையும் விவாகரத்து செய்து விட்டு தற்போது ஆஸ்திரேலிய நடிகையை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ரகசியமாக குடும்பம் நடத்தியதாகவும் இதில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பவன்கல்யாண் மூன்றாவது திருமணம் செய்ததால் ஆந்திராவில் அவரது ‘இமேஜ்’ குறைந்துள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இணைய தளங்களில் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். பெண் ரசிகைகளும் பவன் கல்யாணை கண்டித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.