Header Ads

டெல்லி கால்வாயில் மிதந்த 5 வயது சிறுமியின் பிணம்: கற்பழித்து கொலையா? - போலீசார் தீவிர விசாரணை

நாட்டின் தலைநகரான டெல்லியில் வடமேற்கில் உள்ள ஹைதர்பூர் பகுதியில் கால்வாயில் மிதந்த 5 வயது சிறுமியின் பிணம் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மொங்கோல்புரி பகுதியில் வசித்து வரும் பெண் தனது 5 வயது மகள் மீனாட்சியை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து காணவில்லை என மொங்கோல்புரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காணாமல் போன பெண்ணை போலீசார் தேடிவந்த வேளையில், வடமேற்கு டெல்லியில் உள்ள ஹைதர்பூர் பகுதியின் கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, புகார் அளித்த பெண்ணுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுமியின் பிணத்தை பார்த்து கதறியழுத அந்த பெண், பிணமாக கிடப்பது தனது மகள் மீனட்சி தான் என்று அடையாளம் காட்டினார். பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 'மீனாட்சி கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தெளிவாகி விடும்.

சிறுமியின் சாவுக்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம்' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.