Header Ads

உலக அளவில் சார்லி சாப்ளின் போல் விவேக் புகழ்பெற வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

விவேக் கதாநாயகனாக நடித்த 'நான்தான் பாலா' என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்கள் மற்றும் டிரைலரை டைரக்டர் பாரதிராஜா வெளியிட, டைரக்டர் கே.பாலசந்தர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-

''கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகிய மூவரும் தமிழ் திரையுலகின் மிக திறமையான இயக்குனர்கள். தமிழ் மண்ணின் கலாசாரத்தை படமாக கொடுத்தவர்கள்.

இசையும், பாடல்களும் சந்தோஷத்தையும் தரும். சோகத்தையும் தரும். நகைச்சுவை எப்போதுமே சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். நான் வெளியூர் பயணங்களின்போது, யு-டியூப்பில் விவேக் நடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பேன். அவர், தமிழ் திரையுலகுக்கு கிடைத்த வரப்பிரசாதம். சார்லி சாப்ளின் உலக அளவில் புகழ்பெற்றது போல் விவேக்கும் புகழ்பெற வேண்டும்.''

No comments:

Powered by Blogger.