Header Ads

சினிமா’ கூட்டத்தை கட்டுப்படுத்தும் சாக்கில் பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம்…பரபரப்பு.

பாலிவுட் நடிகரின் பாதுகாவலர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் சாக்கில் பெண்ணிடம் தவறாக நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் வளர்ந்து  இளம் ஹீரோக்களில் ஒருவர் ஷாஹித் கபூர். ஜப் வி மெட், கமினே மற்றும் சமீபத்தில் ரிலீசான ஆர் ராஜ்குமார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பொது இடங்களுக்கு ஹீரோக்கள் சென்றால் ரசிகர்கள் சூழந்துகொண்டு கைகுலுக்குவதுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.
ஆர் ராஜ்குமார் படத்தின் புரமோஷனில் பங்கேற்க மும்பையில்



நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு ஷாஹித் வந்தார். வழக்கம்போல் ரசிகைகள் ஷாஹித்தை காண்பதற்கும், கைகுலுக்குவதற்கும் முண்டியடித்தனர். 



நடிகரிடம் நெருங்கவிடாமல் அவர்களை தூரமாக நிறுத்துவதற்காக ஷாஹித்தின் பாதுகாவலர் இரண்டு கைகளையும் விரித்து தடுத்து நிறுத்தினார். அப்போது வலது பக்கம் நின்றிருந்த ரசிகையிடம் பாதுகாவலர் தவறாக நடந்துகொண்டார்.

இதை அந்த பெண் கண்டித்தார். இக்காட்சி வீடியோவில் பதிவானது. உடனடியாக இணையதளங்களிலும் அது வெளியிடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதுகாவலர் மீது போலீசில் புகார் தரப்பட்டிருக்கிறது.

No comments:

Powered by Blogger.