Header Ads

சமைக்காமல் சீரியல் பார்க்கிறாயா! கணவரின் கண்டிப்பால் மனைவி தீக்குளிப்பு

கடலூர் மாவட்டத்தில் சமையல் செய்யாமல் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்துள்ளார்.
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் எதுவும் செய்யாமல் தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளார்.

இதனால் கோபமமும், மன உளைச்சலும் அடைந்தார் சீதா. பின்னர் கணவர் வெளியே சென்ற நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.