Header Ads

ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம்: திருமணத்திற்கு மறுத்ததால் வாலிபர் மீது புகார்

கோவை கணபதி பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரபாவதி. இவர் கோவை கிழக்கு பகுதி மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
நான் தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தோழி மூலமாக ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் அறிமுகம் ஆனார். முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த 2½ ஆண்டுகளாக எங்களது காதல் உறுதியாக இருந்தது.

கடந்த 5–6–13 அன்று எனது வீட்டில் ஆட்கள் இல்லை. இதனை அறிந்த மூர்த்தி வீட்டிற்கு வந்தார். தனியாக இருந்த என்னிடம் ‘‘நான் உன்னை விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று ஆசை வார்த்தைகளை கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

அதன் பிறகு அவர் என்னை ஒதுக்க ஆரம்பித்து விட்டார். திருமணம் செய்யும்படி கேட்டதற்கு மறுத்துவிட்டார். மூர்த்தி, அவரது தந்தை சொக்கலிங்கம், தம்பி பத்மநாதன், மாமா சந்திரசேகர் ஆகியோர் என்னிடம் வந்து திருமணத்திற்கு வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மூர்த்தி, சொக்கலிங்கம், பத்மநாதன், சந்திரசேகர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.