Header Ads

26 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்

மங்களூரில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாயும், மகளும் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
26 வயது ஜாய்ஸ் லண்டனில் சட்டம் படித்து வருபவர். இவர் பிறந்ததுமே தத்து கொடுக்கப்பட்டு விட்டார்.

இந்நிலையில் தன்னைப் பெற்ற தாயை சந்திக்க அவருக்கு ஆர்வம் வந்ததால் தாயைத் தேடும் பணியில் இறங்கினார்.

ஆனால் அவரது தாயார் இந்தியாவில் இருந்ததால் சக்கீ சிறார் உரிமை என்ற அமைப்பின் இயக்குனரான அஞ்சலி பவார் என்பவரது உதவியை நாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்களது உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கண்டுபிடித்து ஆனந்த மழையில் நனைந்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி பவார் கூறுகையில், ஒரு வருடத்திற்கு முன்பு தங்களது தாயைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து மூன்று பேர் எங்களை அணுகினர். அவர்களில் ஒருவர் ஜாய்ஸ். இதையடுத்து தீவிரத் தேடலைத் தொடங்கினோம்.

ஜாய்ஸ் தத்து கொடுக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முதலில் கண்டுபிடித்தோம். அதன் மூலம் ஜாய்ஸின் தாயாரைக் கண்டுபிடித்தோம். மூல ஊர் மூட்பித்ரி ஜாய்ஸின் பூர்வீகம் மங்களூர் அருகே உள்ள மூ்ட்பித்ரி ஆகும். அங்குதான் ஜாய்ஸின் தாத்தா, பாட்டி வசித்து வந்தனர்.

அந்த ஊரில் வைத்துத்தான் ஜாய்ஸின் தாயார் அவரை பிரசவித்தார். அங்கிருந்தபடியே குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர்.

டெல்லியிலிருந்து நெதர்லாந்துக்கு முதலில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஜாய்ஸ். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்துக்குப் போயுள்ளார். மனநல காப்பகத்தில் தாயார் ஜாய்ஸின் தாயார் மூட்பித்ரியில் உள்ள ஒரு மன நல காப்பகத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஜாய்ஸை வரவழைத்து அவரது தாயாரை அறிமுகப்படுத்தி வைத்தோம் என்று கூறியுள்ளர்.

தாயைப் பார்த்ததுமே கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார் ஜாய்ஸ். ஆனால் ஜாய்ஸின் தாயார் இன்றும் கூட மன நலம் சரியில்லாதவராகவே இருக்கிறார். அவரால் அவரது மகளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது மட்டுமே அவருக்குத் தெரிந்துள்ளது. அவரால் தனது தாய்மை உணர்வுகளைக் கூட முழுமையாக பிரதிபலிக்கவில்லை. காரணம் அவரது உடல் நலம், மன நலம். இவர்தான் உங்களது மகள் என்று கூறியபோது கூட லேசாக புன்னகைத்துள்ளார் ஜாய்ஸின் தாயார்.

No comments:

Powered by Blogger.