பிரியங்கா சோப்ரா வழியில் பிரியாமணி
பிரியாமணி புத்தாண்டை பாங்காக்கில் கொண்டாடினார். ஷாப்பிங், கிளப் விசிட், விலங்குகள் பூங்கா என பொழுதை ஜாலியாக கழித்தவர் தனது கையில் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். டேடிஸ் கேர்ள் (அப்பா பொண்ணு) என்ற வாசகம் இடம்பெறும் வகையில் இவர் டாட்டூ எழுதிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தந்தையின் நினைவாக டேடிஸ் பெட் (அப்பாவின் செல்லப்பெண்) என்று பொருள் படும்படியான டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார். அதேபோல் பாலிவுட் ஹீரோயின்கள் பலரும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கின்றனர். ஹன்சிகா மோத்வானி தனது அம்மா வின் பெயரை டாட்டூவாக போட்டிருக்கிறார்.
பிரியங்காவின் டாட்டூவை பார்த்துத்தான் பிரியாமணியும் தனது அப்பாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த வாய்ப்பை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பாங்காக் சென்ற அவர் தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார்.
No comments: