கட்டுமஸ்தான உடல்வாகுடன் தோன்றவிருக்கும் அரவிந்த்சாமி
தளபதி', 'ரோஜா', 'மும்பாய்' போன்ற படங்களில் தனது வசீகரத் தோற்றத்தால் இளம் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் தோன்றினார். இப்போது மீண்டும் நடிக்க உள்ள புதிய படங்களுக்காக தனது தோற்றத்தை கட்டுமஸ்தாக அவர் மாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, வரும் செப்டம்பரில் துவங்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இப்படியொரு ஆஜானுபாகுவான தோற்றத்தில் வர இருப்பதாக கூறினார். இன்னும் சில படங்களையும் ஒப்புக் கொண்டுள்ளதால் அவற்றிலும் தன்னுடைய கட்டுமஸ்தான தோற்றத்தைத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவதாகவும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவதாகவும் அரவிந்த்சாமி கூறினார். கடந்த சில மாதங்களாக ஒரு உறுதியுடன் இதனைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். திமோத்தி என்ற உடற்பயிற்சி நிபுணர் இதில் எனக்கு உதவியாக இருக்கின்றார். இந்த புதிய உடல்வாகினைப் பெறுவதற்காகத் தொடர்ந்து நான்கு மாதங்களாக உடற்பயிற்சி நிலையத்திற்கும் சென்று கொண்டிருக்கின்றேன்.
இந்தப் புதிய தோற்றம் குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று குறிப்பிட்ட அரவிந்த்சாமி, மகேஷ் மன்ஜ்ரேகரின் ஹிந்தி, தமிழ் இரு மொழித் திரைப்படத்தின் படப்பிடிப்பினை முதலில் முடிக்க உள்ளதாகவும் அதன்பின்னரே தமிழ்ப்படங்களை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.
No comments: