Header Ads

தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: புரோக்கர்கள் 4 பேர் கைது

தியாகராயநகர், கோபால கிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த இடத்தை மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாக புகுந்தனர். வீட்டில் இருந்த விபசார புரோக்கர்கள் தியாகராயநகரை சேர்ந்த சிவ என்ற சிவபிரசாத், ராயப்பேட்டை கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் விபசாரத்தில் ஈடுபட இருந்த சென்னையை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் தியாகராயநகரை சேர்ந்த முகமது நவ்ஷாத்தை கைது செய்தனர். புனேயை சேர்ந்த அழகி மீட்கப்பட்டார்.

பல்லாவரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் பம்மலை சேர்ந்த அப்துல் ரகுமானை போலீசார் பிடித்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அழகியையும் மீட்டனர்.

கைதான விபசார புரோக்கர் சிவபிரசாத் ஏற்கனவே கடந்த 2010, 2011–ம் ஆண்டுகளில் விபசார வழக்கில் 2 முறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.

No comments:

Powered by Blogger.