Header Ads

கள்ளத்தொடர்பு எதிரொலி மனைவியை கொன்று புதைத்த கணவன் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி மகள் ஆனந்தி (26). அதே ஊரைச் சேர்ந்த கலியபெருமான் மகன் குமார் (30). இருவரும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனந்திக்கும், இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதை கைவிடுமாறு ஆனந்தியை குமார் கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் ஆனந்தியின் தாய் சாந்தி, இரும்புலிக்குறிச்சி போலீசில் தனது மகளை காணவில்லை என்றும் குமார் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தார். இதற்கிடையே ஆனந்தியை கொன்று புதைத்ததாக கூறி குமார் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆனந்தியின் உடல் நேற்று தோண்டிஎடுக்கப்பட்டது. பின்னர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.