Header Ads

நள்ளிரவு படப்பிடிப்பில் அஜீத்!

சாதாரண நடிகர்-நடிகைகள் நடித்துக்கொண்டிருந்தாலே ஒரு பெருங்கூட்டம் அந்த ஏரியாவை முற்றுகையிடும். அப்படியிருக்க, அஜீத்-அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் விடுவார்களா? அப்படித்தான் அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது சாரை சாரையாக ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. அந்த கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல்தான் சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்தினார் கெளதம் மேனன்.

அதையடுத்து, இனிமேல் அவுட்டோரில் குறிப்பாக வெட்டவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால், தற்போது மிகப்பெரிய செட் அமைக்கும் துரித பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால், அந்த பணிகள் முடிகிறது வரை ஓய்வாக இருக்க முடியாதே என்பதால், தற்போது சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடுக்கி விட்டிருககிறார் கெளதம்மேனன்.

ஆனால், பகலில் நடத்தினால்தானே ரசிகர்கள் வருவார்கள். இரவில அதுவும் ஆள் நடமாட்டமே இல்லாத நட்டநடுராத்திரியில் நடத்தினால் எப்படி வருவார்கள் என்று அதே ஈசிஆர் பகுதிகளில் ஒதுக்குப்புறமாக இரவு நேர படப்பிடிப்பை நடத்தி வருகிறார். குறைவான நபர்களை வைத்தே படப்பிடிப்பு நடத்தப்படுவதோடு, தினமொரு லொகேசன் என்று இடத்தை மாற்றிக்கொண்டேயிருப்பதால், ரசிகர்களுக்கு அவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்களை கண்டுப்பிடிப்பது இயலாத காரியமாக உள்ளதாம்.

No comments:

Powered by Blogger.