Header Ads

காதலித்து ஏமாற்றினார்: நடிகர் செந்தில் மீது சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

சின்னத்திரை சிம்பு என்று அழைக்கப்படுகிறவர் செந்தில். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோது உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். ஆனால் அதன் பிறகு அவர்கள் காதல் பிரிந்தது. பிறகு மீண்டும் அதே தொடரில் நடித்த சுகன்யாவும், செந்திலும் காதலிப்பதாக கூறப்பட்டது. சுகன்யா பாதி சீரியிலில் இருந்து வெளியேறி சொந்த ஊரான சிங்கப்பூருக்கே சென்று விட்டார். செந்தில் சினிமாவில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காதல் முறிந்தது பற்றி சுகன்யா கூறியிருப்பதாவது: "சரவணன் மீனாட்சியில் நடிச்சபோது செந்திலுக்கும் எனக்கும் ஹாய் சொல்லிக்கிற நட்புதான் இருந்திச்சு. ஏற்காட்டுல ஷூட்டிங் நடந்தப்போ எனக்கு ஒரு சின்ன விபத்து நடந்துச்சு. அப்போ செந்தில் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டார். அப்போ அவர் மேல சின்ன லவ் வந்துச்சு. முதல்ல அவர்தான் காதலை சொன்னார். அப்புறம் அப்பா அம்மா ஒப்புதலோட லவ் பண்ண ஆரம்பிச்சோம். எனக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்தபோ சினிமால நடிக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டார். தனக்கு நிறைய கேர்ள் பிரண்ட் இருப்பதாக காட்டிக்கிட்டார். திருமணத்துக்கு முன்னாடியே இப்படி நடந்துக்கிறவர் பின்னாடி எப்படியெல்லாம் நடந்துக்குவாரோன்னு பயந்து விலக ஆரம்பிச்சேன். அப்புறம் தேடி தேடி வந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சார். அதற்கு பிறகுதான் அவர்கிட்டேருந்து முழுசா விலகிட்டேன்" என்கிறார் சுகன்யா.

இதுபற்றி செந்தில் கூறியிருப்பதாவது: "இரண்டு பேரும் காதலிச்சதும், கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினதும் உண்மைதான். எல்லாமே அவுங்க அப்பா அம்மா சம்மதத்தோடதான் நடந்தது. இடையில கருத்து வேறுபாடுகள் வந்து விலகிட்டோம். அவருக்கு நான் கிடைக்கலியேங்ற கோபத்துல என்னென்னவோ பேசுறார். என் சினிமா இமேஜை உடைச்சு காட்டுறேன்னு மிரட்டுறாங்க. அவுங்க என்ன வேணாலும் பண்ணிட்டு போகட்டும் என்னோட கவனம் எல்லாம் சினிமாலதான்" என்கிறார் செந்தில்.

No comments:

Powered by Blogger.