Header Ads

அலமாறியில் 5 நாட்கள் பதுங்கி இருந்து சிறுமியை 11 முறை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

27 வயது வாலிபர் 14 வயது சிறுமியின் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் அறையில் தங்கி உள்ளார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டு அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.

வட கரோலினாவை சேர்ந்த வாலிபர் ஜார்ட் ஒர்க்மேன் (வயது 27) இவருக்கும் 14 வயதே ஆன ஒரு சிறுமிக்கும் சமூக இணையதளம் மூலம் பழக்கமானது.  இருவரும் இணையதள டெலிபோன் மூலம் பேசிக்கொண்டனர்.சில நாட்களுக்குமுன் சிறுமி அந்த வாலிபரை சந்தித்து உள்ளார். அப்போது  இர்டெல் கவுண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். அழைப்பை ஏற்றுகொண்ட ஒர்க்மேன் அமெரிக்காவின் இர்டெல் கவுண்டிய பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் இல்லை இதனால் சிறுமியின் அறைக்குள் சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் அறையை அவரது தாயார் சுத்தபடுத்தினார் அப்போது மாணவியின் அலமாறியில் சில துணைமணிகளை வைக்க சென்று உள்ளார் அப்போது அலமாறியில் இருந்து வாலிபர் ஒருவர்  வெளிப்பட்டு மின்னல் வேகத்தில் ஓடி உள்ளார். இதில் சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.  

இது குறித்து மாணவியின் தாயார் போலீசில் புகார் செய்து உள்ளார் போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது:-

வாலிபர் கடந்த மாதம் 27 ந்தேதி முதல் மே மாதம் 2 ந்தேதிவரை 5 நாட்கள் சிறுமியின் அறையில் தங்கி உள்ளார். தேவைப்படும் நேரத்தில் அலமாறியில் பதுங்கி உள்ளார். இது பெற்றோர்களுக்கு தெரியவில்லை.சிறுமி கூறும் போது  வாலிபர் ஆன்லைன் மூலம் பழக்கமானதாக கூறினார். மேலும் அவர் வீட்டிற்கு வந்த பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி உள்ளார்.சிறுமியும் வாலிபரும் ஏப்ரல் 27 ந்தேதிக்கு 3 வாரங்களுக்கு முன்தான் பரிச்சயம் ஆகி உள்ளனர். 11 முறை பாலியல் பலாத்காரம் மற்றும்  5 முறை  பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு உள்ளதாக வாலிபர் மீது வழ்க்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.

No comments:

Powered by Blogger.