Header Ads

விஜய் படத்தில் பாடல் எழுதும் தனுஷ்!

ஒய்திஸ் கொலவெறி...'' பாடலை எழுதி பாடிய பிறகு தனுஷின் பாடல்களுக்கு ஒரு மவுசு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நய்யாண்டி படத்தில் அவர் பாடிய பாடலும் ஹிட்தான். அதனால் அவ்வப்போது மற்ற இசையமைப்பாளர்கள் யாராவது பாட அழைத்தாலும் அதை மறுப்பதில்லை தனுஷ். அந்த வகையில், சிம்பு மாதிரியே சமீபகாலமாக தனுசும், பின்னணி பாடராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்திற்காகவும் ஒரு பாடல் எழுதுகிறாராம் தனுஷ். இந்த படத்தில் தனுசை பாட்டெழுத வைக்க வேண்டும் என்பது விஜய்க்கோ அல்லது முருகதாசுக்கோ நோக்கமில்லையாம். ஆனால், அப்படத்துக்கு இசையமைக்கும் அனிருத்தான் தனுஷை உள்ளே இழுத்துள்ளாராம்.

தன்னை 3 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால், தன் பங்குக்கு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அனிருத், இப்படி விஜய், முருகதாஸின் சம்மதத்துடன் இப்படத்துக்குள் தனுஷை பாடலாசிரியராக அப்படத்தில் இணைத்திருக்கிறார். அது மட்டுமின்றி, தனுஷ் எழுதும் பாடலை விஜய்யையே பின்னணி பாட வைக்கப்போகிறார் என்பது ஹைலைட்.

இதனால் தனுசுக்கு ஏக சந்தோசமாம். காரணம், தமிழ் சினிமாவில் தான் மதிக்கிற ஒரு நடிகர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர் என்பதால். அவர் படத்தில் தனது பங்களிப்பை செலுத்த இப்படியாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று அனிருத்தை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறாராம் தனுஷ்.

No comments:

Powered by Blogger.