Header Ads

யாழில் நடந்த குழு விபச்சாரம் அம்பலம்! குழப்பத்தில் பலர்

யுத்தத்தின் பின் யாழில் மட்டுமல்ல வடகிழக்கின் பெரும் பகுதிகள் கலாச்சார சீரளிவு என்கிற போர்வையில் அழிகிறது இதில் தமிழ் சமூகம் சீரளிவது எதிர்காலமத்தல் பாரிய பின்னடைவுகளை சமூகம் சார்ந்து எடுப்பதில் மாற்றமில்லை என கருத்து தெரிவிக்கின்ற மக்கள்

யாழ்.கரவெட்டிப் பகுதியில் நால்வர் ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருக்கும் போது சம்பவ இடத்திலேயே வைத்துக் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுது. இதுதான் யாழ்ப்பாணத்துச் சீரழிவின் உச்சக்கட்டம் எனலாம். அதாவது, கரவெட்டிப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்தையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் சந்தைக்கு வரும் பெண்களை தன் வசப்படுத்தி காம வலைக்குள் விழுத்துகின்றார்.

பின்னர் தனது சகாக்களுடன் அந்தப் பெண்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அப் பெண்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்துவேன் என மிரட்டித் தனது சகாக்களுக்கும் அவர்களை இரையாக்கியுள்ளார்.

இவர்களுடன் ஒரு பெண்ணைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இவர்கள் திட்டங்களைச் செயற்படுத்தி அத் திட்டம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு மாயையைக் காண்பிக்கும் கரவெட்டிப் பிரதேச சபையின் இரவு நேர காமக் கலந்துரையாடலின் ஒலி வடிவில்…

(தேவையேற்படின் மேலதிக காணொளி வடிவம் தரவேற்றப்படும்)

இவர்கள் நீண்ட காலமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், சிறுவர்கள், சித்தசுயாதீனமற்றவர்கள் ஆகியோரையும் இவர்கள் தங்களின் காமப் பசிக்கு உண்டு மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்டார் ஒரு விலை மாது. அதற்காக காலை 6 மணிக்கு இந்த நால்வரும் குளித்து விட்டுக் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அதேநேரம் அப் பெண் அழைத்து வரப்படும் போது பாரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் பாதைகளில் யாரும் இல்லாதவாறு பார்பதற்கு ஒருவர், அழைத்து வர ஒருவர் என வீதி எங்கும் காவலரண்கள் அமைக்கப்பட்டே அப் பெண் கொண்டு வரப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கரவெட்டிப் பிரதேச சபை அலுவலகத்தைப் பயன்படுத்திய இவர்கள், கடந்த சில தினங்களாக அப் பகுதியில் அதிகமாகப் பிரசன்னமாகியிருந்த இராணுவத்தினருக்குப் பயந்து ஆனந்தன் என்பவரின் வீட்டினை இப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு ஆனந்தனும் உடந்தையாக இருந்ததுடன், அவ் இடத்தில் அவர் இல்லாத காரணத்தால் கைது செய்யப்படவில்லை. அவர் எவராவது வீட்டுக்கு வருகின்றனரா என சற்றுத் தொலைதூரத்தில் நின்று வேவு பார்தத்தால் கைதிலிருந்து தப்பித் கொண்டார். அத்துடன் இந்த நால்வருடன் பலர் கூட்டுச் சேர்ந்துள்ளமையும் தற்போது தெரிய வந்துள்ளது.

இவர்களின் இச் செயற்பாடுகளை அவதானித்த அப் பகுதி மக்கள் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்து, பாதுகாப்புப் படையினர் காவல்துறையினருக்கு அறிவித்ததன் பயனாகவே இக் கைது இடம்பெற்றுள்ளது. பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாட வேண்டிய வயதில் தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணுடன் சலாபம் அடித்து விளையாடுகின்றனர் இவர்கள். யாழ்ப்பாணத்தின் கலாசாரம் எங்கு சென்று விட்டது?

இருபது வயது இளைஞனுடன் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தால் நிச்சயம் அப் பெண் பாதுகாப்பாகத்தான் வந்து சேரும். ஆனால் அதே பெண்ணை அறுபது வயது முதியவருடன் அனுப்பினால் கற்பிழந்து தான் வந்து சேரும் என்ற நிலை தற்போது யாழ்ப்பாணத்தில் உருப்பெற்றுள்ளது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பலரின் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை நாம் இவ்விடத்தில் தரவேற்றினால் அவர்களின் குடும்பம் பிளவுபடும். அதனால் அதனை நாம் நிறுத்தியுள்ளோம். இருந்தும் அவர்களின் இச் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அதனையும் நாம் தரவேற்றப் பின் நிற்க மாட்டோம் என இவ்விடத்தில் தெரியப்படுத்துகின்றோம்.

ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் எனப் பேரம் பேசித்தான் தன்னை அழைத்து வந்ததாகவும் ஆனால் இங்கு நான்கு பேர் என்னுடன் உறவாடி விட்டு வெறும் ஆயிரம் ரூபாயைத் தந்துள்ளனர் என அந்த விலை மாதுவின் முறைப்பாடாக உள்ளது.

காலம் செய்த கோலத்தால் கண்ணீர் விட்டு அழுகிறது யாழ்ப்பாணம். கலாசாரத்துக்குப் பெயர் போன யாழ்ப்பாணம் இன்று பாழ்பட்டு நிற்கின்ற பரிதாம நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை. ஒரு பெண்ணை நான்கு பேர் இரையாக்குவதும், அந்தப் பெண் நான்காயிரம் ரூபாய் கேட்பதும் யாழ்ப்பாணத்திலா இச் சம்பவம் இடம்பெற்றது என எண்ணத் தோன்றுகிறது. மனம் நம்ப மறுக்கிறது. இவர்களுக்குச் சட்டம் கடுமான தண்டனையை வழங்க வேண்டும். அந்தத் தண்டனை தான் இனிவரும் காலங்களில் இச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒரேயொரு வழியாக அமையும்.

No comments:

Powered by Blogger.