Header Ads

மீனாட்சி தீட்ஷித்தின் புலம்பல்

தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி தீட்ஷித் படு அப்ஸெட்டாக இருக்கிறாராம். மும்பையைச் சேர்ந்த மீனாட்சி தீட்ஷித் தமிழ்ப்படங்களில் நடித்தால் சிம்ரன், ஹன்சிகா போல் நாமும் சீக்கிரமே பெரிய ஸ்டாராகிவிடலாம் என்ற கனவில்தான் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார். அவரது லட்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் அவரை சென்னைக்கு அழைத்து வந்த கோ ஆர்டினேட்டர் வடிவேலுவைப் பற்றி பெரிய அளவுக்கு பில்ட்அப் கொடுத்து, முதல் படத்திலேயே வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள்.

தெனாலிராமன் படத்தில் நடித்த பிறகுதான் கோடம்பாக்க சென்ட்டிமெண்ட் மீனாட்சி தீட்ஷித்துக்குப் புரிந்திருக்கிறது. காமெடியனுக்கு ஜோடியாக நடித்ததால் பெரிய ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியாது, அதை பெரிய ஹீரோக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற உண்மை அவருக்கு புரிய ஆரம்பிக்க அப்ஸெட்டாகிவிட்டார் மீனாட்சி தீட்ஷித். பட்ட காலிலேயே படும் என்பதுபோல், அடுத்து அவரைத் தேடி வந்த வாய்ப்பு என் வழி தனி வழி என்ற படம். இந்தப்படத்தில் ஆர்கேவுக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி தீட்ஷித்தை அணுகி உள்ளனர்.

ஆர்கே யார் என்றே மீனாட்சி தீட்ஷித்துக்கு தெரியாது. வழக்கம்போல் அவரது கோ ஆர்டினேட்டர் ஆர்கேவை ரஜினி ரேன்ஜுக்கு பில்ட்அப் பண்ண, அதை நம்பிய மீனாட்சி தீட்ஷித் ஆர்கே உடன் நடிக்க ஒப்புக்கொண்டார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த பிறகே ஆர்கேவின் மார்க்கெட் மதிப்பு என்ன? உண்மை அவருக்கு தெரிய வந்திருக்கிறது.
பாஷை தெரியாத ஊருல நம்மளை இப்படி மோசம் பண்ணிட்டாங்களே என்று புலம்புகிறாராம் மீனாட்சி தீட்ஷித்.

No comments:

Powered by Blogger.