Header Ads

கார் விபத்து - நடிகர் நாசரின் மகன் கவலைக்கிடம்!

மாமல்லபுரத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில், நடிகர் நாசரின் மகன் படுகாயம் அடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் நாசர். எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை அருகே வந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த பாசிலின் நண்பர்கள் 3 பேர் பலியாகினர். பாசில் மற்றும் அவரது இன்னொரு நண்பர் விஜயகுமார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாசில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்டர்கள், பாசிலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.