Header Ads

காதலனுடன் ஓடிய சிறுமி மீட்பு

பெரம்பூர் : வியாசர்பாடியை சேர்ந்தவர் நிஷா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்ற நிஷா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சுந்தர் (17). என்பவருடன் நிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியது. 

3ம் தேதி இரவு, நிஷா, சுந்தரை சந்தித்தார் என தெரிந்தது.தனிப்படை போலீசார் விசாரணையில், சிறுமியும் அவளது காதலனும் விழுப்புரத்தில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, விழுப்புரம் சென்ற போலீசார், சுந்தரையும், நிஷாவையும் மீட்டு காவல்நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், இருவருக்கும் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Powered by Blogger.