பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வாய்ப்பு- மு.க.ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குனியமுத்தூரில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு குனியமுத்தூர் பகுதி தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க. மாநாட்டுக்கான அழைப்பிதழை டாக்டர் கிருஷ்ணசாமியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தலைவர் கலைஞர் அதனை முடிவு செய்வார்.
எங்களுடன் புதிய தமிழகம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெறுவோம் என்றார்.
No comments: