Header Ads

படப்பிடிப்பில் சிம்புவை சந்திக்க மறுத்த ஹன்சிகா

சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்தனர். இருவருமே இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள். திருமணத்துக்கு சிம்பு அவசரப்படுத்தினார். ஆனால் ஹன்சிகா ஏற்கவில்லை. சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

ஹன்சிகா, தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். இதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். இதைவிட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதை ஹன்சிகா குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இது ஹன்சிகாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிம்புவும் நயன்தாராவும் பழைய காதலர்கள். இருவரும் தீவிரமாக காதலித்தார்கள். திருமணத்துக்கும் தயாரானார்கள். இந்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு அதுவும் தகராறில் இருந்தது. இனி காதலே வேண்டாம் என்று சினிமாவில் முழுமையாக ஈடுபட்ட அவரை சிம்பு மீண்டும் தனது ஜோடியாக்கியுள்ளார். ஆனாலும் அவரால் ஹன்சிகாவை மறக்க முடியவில்லை. காதலை புதுப்பிக்க ஹன்சிகாவை தேடி சென்றார். அவர் படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது என்று விசாரித்து அறிந்து அங்கெல்லாம் சென்றார். ஆனால் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்து விட்டார். 

சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் ஹன்சிகாவை சந்திக்க சென்றதாகவும் அங்கேயும் சிம்புவை பார்க்க அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.