சாகசம் செய்த மன்சூர் அலிகானின் தலையில் தீ பற்றியதால் பரபரப்பு
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கும் படம், அதிரடி. இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, ஜி.சேகரன் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சாகசங்கள் மேற்கொண்டார் மன்சூர் அலிகான்.
தொடர்ச்சியாக 50 முட்டைகளை சாப்பிட்ட அவர், தன் வயிற்றின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து, அதை சம்மட்டியால் உடைக்கும் சாகசத்தை செய்தார். பிறகு ஓடுகளை காலாலும் பீர் பாட்டில்களை கையாலும் உடைத்தார்.
தொடர்ந்து ஓடுகளின் மீது நெருப்பு பற்ற வைத்து, தலையால் உடைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலையில் தீப்பிடித்தது. உதவியாளர்கள் ஓடிவந்து, கோணிப்பையை அழுத்தி தீயை அணைத்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.பிறகு நிருபர்களிடம் மன்சூர் அலிகான் பேசும்போது, இந்த ஆண்டின் முதல் தொடக்க விழா என்பதால், சாகச நிகழ்ச்சி நடத்தினேன். படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். முத்து மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார்.
No comments: