மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
டந்த 8-ந் தேதி 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக களமிறங்கிய போதிலும், எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், இன்று தேடுதல் பணி தொடர்பாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது. பயணிகள், விமான ஊழியர்கள் பற்றி கூடுதல் விபரம் சேகரித்து வருகிறோம். ரேடார் தகவல்களை மற்ற நாடுகளிடம் கேட்டுள்ளோம் என்று கூறினார்.
மேலும், விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
No comments: