விவாகரத்து செய்தியால் டென்சனான அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய்!
நடிகர் அபிசேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் இருவரும் இந்தி படங்களில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர். பின்னர் 2007ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்தார். அதன்பிறகு நடிப்பை விட்டு விலகி ஆரத்யாவை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் சென்றபோதும், குழந்தையை பராமரிக்க வேண்டும் என்று அவற்றை தவிர்த்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இதற்கிடையே சினிமா சம்பந்தப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு தொடர்ந்து சினிமாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மாமியார் ஜெயாபச்சனுக்குமிடையே அடிக்கடி குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணமும் உள்ளன. இதையடுத்து, அபிசேக்பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்குமிடையே தற்போது போர் வெடித்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது.
இதனால், அபிஷேக்-ஐஸ்வர்யாராய் தம்பதியினர் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து கொஞ்சம் விட்டால் எங்களுக்கு விவாகரத்து வாங்கித்தந்து, வேறு திருமணமும் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கே என்று தனது டுவிட்டரில் வருத்தத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார் அபிசேக்பச்சன்.
No comments: