மாயமான மலேசிய விமானத்தை இந்தியா தீவிரமாக தேடுகிறது
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவவேண்டும் என்று மலேசியா கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது போர் கப்பல்கள், விமானங்களை அந்தப்பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
இந்தியா தனது தேடுதல் வேட்டையை நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. இந்தத்தேடுதல் பணியை தீவிரப்படுத்தும் விதத்தில் கூடுதல் போர் விமானங்களையும், கப்பல்களையும் இந்தியா ஈடுபடுத்தியது.
அந்த வகையில், சமீபத்தில் வாங்கிய ‘பி-8ஐ’ அதிநவீன விமானங்கள், ‘சி130 ஜே’ விமானம் ஆகியவற்றை வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலின் மேலே தேடும் பணியில் நேற்று இந்தியா களம் இறக்கியது. கடற்படை, கடலோரக் காவல் படையின் டோர்னியர் விமானமும், மாயமான விமானத்தை தேடுகிறது.
கடலோரக் காவல் படையும், கடற்படையும் 6 போர்க்கப்பல்களை மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூடுதலான விமானங்கள், கப்பல்களையும் ஈடுபடுத்த இந்தியா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments: