Header Ads

காதல் பிரிவை விட தங்கையின் பிரிவால் சிம்பு கண்ணீர் -

தங்கை திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்றதை எண்ணி கண்ணீர்விட்டு அழுதார் சிம்பு. ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்புவிடம், உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்டபோது, தங்கை இலக்கியா திருமணம் முடிந்தபிறகுதான் எனது திருமணம் நடக்கும் என்றார்.இலக்கியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதற்கிடையில் சிம்பு, ஹன்சிகா காதலில் பிரச்னை எழுந்துள்ளது. ஹன்சிகாவுக்கு அவரது அம்மா, சிம்புவை காதலிக்கக்கூடாது, நடிப்பில் கவனம் செலுத்து என்று நிபந்தனை விதித்திருக்கிறார். இந்நிலையில் இலக்கியா திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சிம்பு தனது இணையதள பக்கத்தில் உருக்கமான தகவல் வெளியிட்டிருக்கிறார். 

அதில், திருமணத்துக்கு பிறகு எனது தங்கை அவரது கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த பிரிவை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறேன். காதலில் ஏற்பட்ட பிரிவைவிட இந்த பிரிவுதான் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரிவை எப்படி தாங்கிக்கொள்ளப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. இலக்கியா புறப்பட்டு சென்ற அடுத்த நிமிடம் முதல் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். காதல் பிரிவு என சிம்பு கூறியதன் மூலம் ஹன்சிகாவுடன் அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

No comments:

Powered by Blogger.