Header Ads

விமான நிலையத்தில் நயன்தாராவை முறைத்த ஹன்சிகா

நயன்தாராவும், ஹன்சிகாவும் விமான நிலையத்தில் முறைத்துக்கொண்டு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். படப்பிடிப்புகளில் இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் காதல் வாழ்க்கை நயன்தாரா வருகையால் தடுமாற துவங்கியுள்ளது. 

ஏற்கெனவே நயன்தாராவும் சிம்புவும் காதலித்து பிறகு கருத்து வேறுபாட்டினால் பிரிந்தார்கள். அப்போது ஒருவரையொருவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தனர். பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தாலும் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. 

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாரா தேர்வாகியுள்ளார். சிம்பு விருப்பத்தில் தேர்வில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஹன்சிகா வுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாம். 

நயன்தாராவுடன் சிம்பு நடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் விழுந்துள்ளது என்கின்றனர். படப்பிடிப்பில் நயன்தாராவும் சிம்புவும் நெருக்கமாக உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்த படங்கள் இன்டர்நெட்டில் வந்தன. இந்த படங்களை பார்த்து ஹன்சிகா கடும் கோபப்பட்டாராம். 

இதுவே நயன்தாராவை விமான நிலையத்தில் சந்தித்தபோது முறைத்து பார்க்க வைத்ததாம். சென்னை விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நேருக்கு நேர் சந்தித்தார்களாம். அப்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஹன்சிகா கோபமாக முறைத்து பார்த்துள்ளார். இருவருக்கும் சண்டை மூழ்வது போன்ற சூழ்நிலை நிலவியதாம். பிறகு ஒருவரை தாண்டி மற்றவர் வேகமாக நடந்து சென்று விட்டனர்.

No comments:

Powered by Blogger.