Header Ads

விறுவிறு வேகத்தில் விஜய் - முருகதாஸ்!

ஐங்கரன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

'வாள்', 'அடிதடி' என்று படத்துக்கு டைட்டில் வைத்தனர். ஆனால், அந்த டைட்டில் வைக்கப்படவில்லை. 'தீரன்' தான் படத்தின் டைட்டில் என்று சொல்லப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், படத்தின் ஷூட்டிங் மட்டும் விறுவிறு வேகத்தில் நடைபெற்று வருகிறது.கொல்கத்தாவில் தொடங்கிய ஷூட்டிங்கில் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது.



சென்னை ஏர்போர்ட்டில் நடந்த ஷூட்டிங்கில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சிறைச்சாலை செட் போடப்பட்டு ஷூட்டிங் நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் இங்கு ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் டோட்டா ராய் செளத்ரி சிறையில் இருந்து தப்பித்து செல்வது போன்றும், அவரை பிடிக்க விஜய் நடத்தும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்துவிட வேண்டுமென்று வெகுவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.

No comments:

Powered by Blogger.