Header Ads

பாலியல் பலாத்காரம்? டைரக்டரை அடித்த நடிகை கீத்திகா

பாலியல் பலாத்காரம் செய்த டைரக்டரை நடிகை அடித்து உதைத்தார். இது வீடியோ படமாக இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் பெயர் கீத்திகா. இவர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாட்தபிஷ், ஆத்மா, ஒன் பைடூ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கீத்திகாவை ‘ஜாலி எல்.எல்.பி.’ என்ற இந்தி படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியானார். கீத்திகா ஆவேசமாக டைரக்டர் சுபாஷ் கபூர் கன்னத்தில் மாறி மாறி அடித்தார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த படத்தை கீத்திகா தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டைரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குறிப்பிட்டு உள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

போலீசில் புகார் செய்யவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.