Header Ads

விஜய் சேதுபதியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்! - கேயார் பேச்சு

விஜய் சேதுபதியை  மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற வேண்டும்! என்று 'அலையே.. அலையே'ஆடியோ விழாவில் கேயார் பேசினார்.

வேதநாயகி பிலிம்ஸ் தயாரிக்கும் ஏ.ஆர். முருகன், சி.ஜவகர் பழனியப்பன் வழங்கும் படம் 'அலையே அலையே'. புதுமுக இயக்குநர் ஜி.மணிகண்டகுமார் இயக்கியுள்ளார். நாயகனாக 'மானாட மயிலாட' புகழ் ரஞ்சித்தும், நாயகியாக அங்கீதா நயனாவும் நடித்துள்ளார்கள் இப்படத்தின்  இசை  வெளியீட்டு விழா  சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் இசையை கேயார் வெளியிட நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் டி.இமானும் பெற்றுக்கொண்டனர்.


கேயார் பேசும் போது, " இன்று இந்தப்பட விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருந்திருக்கிறார்.விஜய் சேதுபதி யதார்த்தமான நடிகர். இப்போதுள்ள நடிகர்களில் இயல்பான நடிப்பில் விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும். இன்று தங்கள் படங்கள் சம்பந்தப்பட்ட  நிகழ்ச்சிகளுக்கே நடிகர்கள் வரத் தயங்குகிறார்கள். பல பெரிய நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டுக்கு வருவதில்லை.

அப்படி இருக்கும் போது இவர் தான் சம்பந்தப் படாத நிகழ்ச்சிகளுக்கும் வந்து கலந்து கொள்வது வாழ்த்துவது பாராட்டுக்குரியது.இன்னொரு படத்தின்  ப்ரமோஷனுக்கு  வந்திருந்து அவர் பெருந்தன்மையுடன் உதவுவதை வரவேற்க வேண்டும். இதை மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற வேண்டும். 

உலக நாயகன் கமல் அவர்களும்  இப்படி மற்றவர் படங்களின் ப்ரமோஷனுக்கு
வருகிறார்கள்;வாழ்த்துகிறார்கள். சின்னபடம் பெரிய படம் என்று பார்க்காமல் முறையாக அழைப்பு விடுத்தால் கமல் வந்து வாழ்த்துகிறார். அதே போல சகோதரர் சூர்யா அவர்களும் வருவது பாராட்டுக்குரியது. 

இன்று பெரிய நடிகர்கள் நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளை மதிப்பதே இல்லை அதற்கு அவர்களது மேனேஜர்கள் குறுக்கே நிற்கிறார்கள். அவர்கள்கூட இப்படி தவறான வழிகாட்டுகிறார்கள்.  '' என்று ஆதங்கத்தோடு பேசினார்.

No comments:

Powered by Blogger.