Header Ads

நடிகர் வீட்டு நீச்சல் குளத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தால் பரபரப்பு....

இந்தி நடிகர் மொனிஷ் பெஹ்லின் பங்களாவில் பிறந்து 6 நாளே ஆன குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் மொனிஷ் பெஹ்லின் அம்மாவான மறைந்த பாலிவுட் நடிகை நூதனின் பங்களா மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருக்கும் கரேகாவ்ன் பார்சிக் ஹில் பகுதியில் உள்ளது.

இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் பிறந்து 6 நாளே ஆன பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை இறந்து பல நாட்கள் ஆகியதால் உடல் அழுகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை அந்த பங்களாவில் போட்டுச் சென்றவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், மொனிஷ் பெஹ்ல் அந்த பங்களாவுக்கு கடந்த சில மாதங்களாக செல்லவே இல்லை. இந்நிலையில் தான் யாரோ குழந்தையை அங்கு போட்டுள்ளனர் என்றும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.