தெற்கு சூடான் நாட்டில் இரண்டாவது நாளாக மோதல்: 26 பேர் பலி
தெற்கு சூடான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் தூண்டிவிடப்பட்டுள்ள போராட்டம் முறியடிக்கப்பட்டதாக அதிபர் சல்வா கிர் நேற்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் இன்றும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளது.
டோம்பிக் நகரில் கடும் துப்பாக்கி சத்தம் கேட்டு வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தலைநகர் ஜுபாவில் இன்று நடந்த புதிய தாக்குதலில் சுமார் 26 பேர் வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டையின் போது காயமடைந்து ஜுபா பயிற்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 26 பேர் இன்று இறந்துபோனதாக அங்கு பணிபுரியும் மருத்துவர் மகூர் மட்டுர் கரியோம் தெரிவித்தார்.
அங்கு தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் எவ்வளவு பேர் இறந்து போனார்கள் என சரியாக கணக்கெடுக்கவில்லை என கூறப்படுகிறது.
No comments: