Header Ads

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை ஹெலிகாப்டர் மர்மமான முறையில் விபத்து: 6 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்குப்பகுதியில் உள்ள ஷாஜாவ் மாவட்டத்தில் இன்று நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மர்மாமன முறையில் விபத்துக்குள்ளானது. இதில் நேட்டோ படை ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்கள் என்பது தெரியவில்லை.

அப்பகுதியானது தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இதில் தலிபான்களின் கைவரிசை இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஹமீத் கர்சாய் அரசுக்கு ஆதரவாக இருந்த நேட்டோ படையினர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் முழுமையாக ஒப்படைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து நேட்டோ படையினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இருந்தும் 97 ஆயிரம் நேட்டோ படை வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இவர்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

No comments:

Powered by Blogger.