Header Ads

தேன்நிலவு தம்பதியினரின் உயிரைப் பறித்த விபத்து

திருமணம் முடிந்த மறுநாளில் இந்திய தேன்நிலவு தம்பதியர் வீதி விபத்தில் பலியான சம்பவம் தென் ஆப்ரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆஷ்லே ரெட்டி(30) என்பவரும் அங்கு வசிக்கும் தீபிகா(29) என்ற பெண்ணும் காதலர்கள்.

இதனையடுத்து இரு வீட்டாரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.

உறவினர்கள், நண்பர்கள் என சுமார் ஆயிரம் பேர் முன்னிலையில் ஆஷ்லே ரெட்டி- தீபிகா திருமணம் கடந்த ஞாயியிற்றுக்கிழமை தென் ஆப்ரிக்காவில் வெகு விமரிசையாக நடந்தேறியது.

சந்தோஷ கனவுகளோடும், மனம் நிறைந்த கற்பனைகளுடனும் புதுமண தம்பதியர் தேன்நிலவு கொண்டாட காரில் சென்றனர்.

இந்நிலையில் எதிர்பாரத விதமான இடம்பெற்ற வாகன விபத்தில், புதுமண தம்பதியர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரு தினங்களுக்கு முன் புதுமண தம்பதியரை மணக்கோலத்தில் வாழ்த்தி மகிழ்ந்த உறவினர்களும், நண்பர்களும் பிணக்கோலத்தில் காண சகிக்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கல் மனதையும் கரைய வைக்கும் விதமாக அமைந்திருந்தது.

No comments:

Powered by Blogger.