Header Ads

சித்தார்த்தை காதலிக்கிறேனா? சொல்கிறார் சமந்தா ...

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும், என்.லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடிக்கும் சமந்தா, தெலுங்கில் நடிக்க அதிக முக்கியத்துவம் தருகிறார். சித்தார்த்துடன் அவர் நடித்தபோது இருவரும் நண்பர்களானார்கள். இதையடுத்து அவர்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஐதராபாத் வீட்டில் இருவரும் சேர்ந்து வசிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், திடீரென்று சித்தார்த் குடும்பத்தினருடன் சமந்தா காளஹஸ்தி கோவிலுக்கு சென்று ராகு, கேது பூஜையில் பங்கேற்றார். 

சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பதால், உடனே ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்ததால், சமந்தாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. உடனே அவர், சித்தார்த் எனக்கு மிக நெருக்கமான நண்பர் என்று ட்விட்டரில் குறிப்பிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்திலுள்ள ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சமந்தா. 

அப்போது சித்தார்த் குறித்து கேட்டபோது, உலகிலேயே மிகச் சிறந்த மனிதர் சித்தார்த் என்று குறிப்பிட்டார். அவரை காதலிப்பது பற்றியோ அல்லது திருமணம் செய்வது குறித்தோ பதில் சொல்லவில்லை -

No comments:

Powered by Blogger.