பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து தொடர்பான கருத்துக்கள்!...video
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 22 வருடகாலமாக சிறையில் வாடிய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பழ.நெடுமாறன், மற்றும் இம்மூவரின் வழக்கறிஞர் சந்திரசேரம் ஆகியோர் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தனர்.
செங்கொடியின் கனவு நிறைவானது
தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை(28.08.2011) அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடியின் (வயது 27) கனவு நிறைவேறியுள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியிருந்தார்,





No comments: