Header Ads

முசாபர்நகர் கலவர வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சரண்: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மாநிலத்தையே உலுக்கிய இந்த கலவரம் தொடர்பாக 16 அரசியல் பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் முசாபர் நகர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான கதிர் ரானாவும் ஒருவர்.

ஆகஸ்ட் 27-ம் தேதி முசாபர் நகர் மாவட்டம் கவால் கிராமத்தில் நடந்த இனவாத மோதலில் 3 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் 30-ம் தேதி கலாபர் பகுதியில் தடையை மீறி நடந்த பொதுக்கூட்டத்தில் வெறுக்கத்தக்க வகையில் ரானா பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலவரம் ஆரம்பித்த 7-ம் தேதி முதல் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த ரானா, மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முசாபர் நகர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி தலைமை ஜூடிசியல் நீதிபதி கே.பி.சிங் உத்தரவிட்டார்.

2007-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் இணைந்த ரானா, அதன்பின்னர் 2009ல் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். அவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 4 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.