Header Ads

ஆந்திராவில் போலி வாக்காளர்கள் கண்டுபிடிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

புதிய மென்பொருளை கொண்டு போலி வாக்காளர்களை கண்டுபிடித்துள்ளதாக ஆந்திர தேர்தல் ஆணைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்மென்பொருளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் பற்றிய விவரங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சரிபார்க்க அனுப்பட்டுள்ளதாக வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி சஷிபூஷன் குமார் தெரிவித்துள்ளார்.

“கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் போலி வாக்காளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் சரிபார்ப்புக்கு பின் இவை அனைத்தும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் டிசம்பர் 30 தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையும்” என சஷிபூஷன் குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.