இலங்கை இனப்படுகொலை எதிரொலி: மனித உரிமை மீறலுக்கு எதிரான ஐ.நா. அதிரடி செயல் திட்டம் தயார்
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரின்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையும், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவந்தார். இதுகுறித்த அறிக்கையை அவர் மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். அப்போது இலங்கைக்கு எதிராக மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா. வல்லுனர்கள் குழு தயாரித்துள்ள அதிரடி செயல்திட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:-
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை ஆராய்ந்த ஐ.நா. விசாரணைக்குழுவினர் மனித உரிமைகள் குறித்த அதிரடி செயல்திட்டம் ஒன்றை தாயாரித்தனர். இந்த திட்டமானது இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி செயல்திட்டமானது, ஒரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இது அனைத்து நாட்டிற்கும், அனைத்து காரணங்களுக்கும், அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. வெளியிட்ட இந்த அதிரடி செயல்திட்டம் இலங்கைக்கு மேலும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இலங்கை இதை சட்டப்படி, தார்மீக அடிப்படையில் தவறானது என்று கூறியுள்ளது.
No comments: