சிவாஜி சிலையை அகற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் 12-7-2006 அன்று சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அகற்றக்கோரி திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த போக்குவரத்து போலீசார், 'சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த சிலையினால் வாகன விபத்துக்குள் ஏற்படுகிறது' என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து இந்த சிலையை அகற்றக்கூடாது என்று நடிகர் சிவாஜி சமூகநல பேரவை, தமிழ் சங்க பலகை அமைப்பின் நிறுவனர் எம்.சி.தமிழ்பித்தன் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்திரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெரனல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.எம்.சலீம் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
No comments: