ட்ரைலர பார்த்து ஏமாந்துட்டோம் பா!!!
இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் முகவரியே அப்படத்தின் டிரைலரும், பாடலும் தான். இவை இரண்டும் பிடித்திருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கே செல்கின்றனர்.
ஆனால் அப்படியும் டிரைலரை பார்த்து ரசிகர்கள் ஏமாந்துள்ளனர். அப்படி அவர்கள் ஏமாந்த பிரபல நடிகர்களின் படங்கள் சில.
குசேலன்
இந்த படத்தின் ட்ரைலர் முழுவதுமே சூப்பர் ஸ்டாரையே காட்டி காட்டி, தியேட்டருக்கு போன ரசிகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்னென்றால் அந்த ட்ரைலரில் வந்த அளவிற்கு தான் ரஜினி படத்திலும் வருவார். இப்படத்தின் தோல்விக்கான முக்கிய காரணமே இதற்கு கொடுக்கப்பட்ட ஓவர் விளம்பரம் தான்.
மன்மதன் அம்பு
தசாவதாரம், உன்னை போல் ஒருவன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு படத்தின் ட்ரைலரை பார்த்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் தான் மன்மதன் அம்பு, இப்படம் வெற்றிப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வந்தது.
அனைவரும் காமெடி நன்றாக இருக்கும் என்று நினைத்து தியேட்டருக்கு போனால் நமக்கு கிச்சு கிச்சு மூட்ட இரண்டு ஆட்களை அவர்களே வேலைக்கு வைத்திருந்தனர், ஆனால் அப்போதும் யாருக்கும் சிரிப்பு வரவில்லை என்பது தான் மிகப்பெரிய காமெடி.
பில்லா 2
பில்லா வெற்றியை தொடர்ந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் பில்லா 2, அதற்கு முக்கிய காரணமே படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் யு-டியுபில் இருபது லட்சத்திற்கு மேல் அனைவரும் பார்த்து சாதனை படைத்தது, ஆனால் படம் வந்த மூன்று நாட்களுக்கு பிறகு அஜித் மட்டுமே திரையில் நடந்து கொண்டிருந்தார்.
சுறா
விஜய் நடிப்பில் வெளிவந்த 50வது படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர், இந்த படத்திற்கு கொடுத்த விளம்பரத்தால் படத்திற்கு எதிர்பார்ப்பு விண்ணை தொட்டது, ஆனால் படம் தியேட்டரில் ஓடியதை விட தொலைக்காட்சியில் ட்ரைலராக ஓடிய நாட்கள் தான் அதிகம்,
மாற்றான்
ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை கதை என ஆரம்பத்திலேயே நம் பல்ஸை எகிற வைத்து, ட்ரைலரில் சூர்யா செய்யும் சாகசம், நடிப்பை பார்த்து, எதிர் பார்த்து போன ரசிகன் படம் முடிந்து சுமார் 6 மாதம் கழித்து தான் தியேட்டரை விட்டு வெளியே வந்தான், அந்த அளவிற்கு படத்தின் நீளம் ரசிகனை மிகவும் சோதித்தது.
தாண்டவம்
தெய்வத்திருமகள் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்து கொடுத்த படம் தான் தாண்டவம், ஹாலிவுட் பாணியில் லண்டனில் ஏற்படும் தீவிரவாத செயல்களை பற்றி ட்ரைலரில் காட்டுவது மட்டுமில்லாமல் விக்ரம் கண் தெரியாமல் நடித்திருக்கிறார்.
கண்டிப்பாக இது வித்தியாசமாக தான் இருக்கும் என தியேட்டருக்கு போன ரசிகன் கண்ணிலும், கொடுத்த பணத்திலும் தாண்டவம் ஆடிவிட்டார்கள்.
ஒஸ்தி
இவர் படமெல்லாம் தியேட்டருக்கு வருவதே அரிது, அதில் நல்ல படம் வருவது அரிதிலும் அரிது, கமர்ஷியல் கிங் தரணி இயக்கிய படம் தான் ஒஸ்தி. இப்படத்தின் ட்ரைலர் பார்த்து எல்லோரும் அசந்து தான் போனார்கள், தனுஷை கிண்டல் செய்து வசனம் என சிம்பு பட்டையை கிளப்பினார்.
ஆனால் திரையில் பார்த்த போது தான் ஏதோ சிறுவர்களுக்கான பேன்சி ட்ரஸ் போட்டி போல் சிம்புவை போலிஸ் உடையில் பார்த்து அனைவருக்கும் குபீர் சிரிப்பை வரவைத்தார்.
மரியான்
இப்படத்தின் ட்ரைலரை பார்த்து ஏதோ தனுஷ்க்கு அடுத்த தேசிய விருது ரெடி என்று படத்திற்கு போனால், எல்லோரும் நன்றாக தான் நடித்திருந்தார்கள், ஆனால் மேன் வெஸ் ஒயில்டில் வருவது போல் பாலைவனத்தையே சுற்றி காட்டி நமக்கு தலைச்சுற்ற வைத்துவிட்டார்கள். இதுக்கு டிஸ்கவரியே பார்த்து இருக்கலாம் மக்களின் ரியாக்ஸன்.
அவன்-இவன்
பாலா என்ற மாபெரும் இயக்குனரின் படம் மேலும் விஷாலின் நடிப்பு என நம்மை முதலில் ஈர்த்தப்படம், ட்ரைலரில் விஷாலின் நடிப்பை பார்த்து கண்டிப்பாக இப்படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என வண்டிக்கட்டி போனவர்கள், படத்தின் கதையை தியேட்டருக்குள்ளேயே கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர். பாலா ஒரு படைப்பாளியாக நம்மை ஏமாற்றியப்படம்.
இரண்டாம் உலகம்
செல்வராகவன் என்ற இயக்குனருக்காகவே எதிர்பார்த்தப் படம். இதன் ட்ரைலரை பார்த்த தமிழன் 'படம் வந்தவுடன் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் பாருடா, அப்படி இப்படி என பில்டப் கொடுத்து படத்திற்கு போனால் வழக்கம் போல் ரசிகர்களை மண்டைகாய வைத்துவிட்டார் செல்வா.
நல்ல முயற்சி தான் ஆனால் வலுவில்லாத திரைக்கதையால் ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைத்த வரவேற்பு கூட இந்த இரண்டாம் உலகத்திற்கு கிடைக்கவில்லை. இதில் படம் முடியும் போது மூன்றாம் உலகம் வேற...
இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை, ஒரு சாதாரண சினிமா ரசிகனின் மனக்குமுறல் தான்.
No comments: