Header Ads

நடிகை மனோரமா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் டாக்டர்கள் தீவிர சிகிச்சை

நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிகை மனோரமாவுக்கு வயது 77  ஆகிறது. 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய முழங்காலில் பயங்கர வலி ஏற்பட்டது. இதற்காக அவர், ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதையட்டி அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியபின், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது 77-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்

மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர சிகிச் சைக்குள்ளேயே வைக்கப் பட்டு இருப்பார் என்று ஆஸ்த்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனோரமாவுக்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். மூட்டுவலிக்கு ஆபரேசன் செய்தார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொ டர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.